உயிர்க்கொல்லி நீட்: எர்ணாகுளத்தில் துயரம்.. தமிழக மாணவரின் தந்தை மாரடைப்பால் திடீர் மரணம்
நீட் தேர்வுக்கு மகனை எர்ணாகுளம் அழைத்து சென்ற தந்தை கிருஷ்ணசாமி என்பவர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.
Recommended Video

சென்னை: நீட் தேர்வை எழுத எர்ணாகுளத்துக்கு அழைத்து சென்ற தந்தை கிருஷ்ணசாமிக்கு திடீர் என மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி விளக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (47). அரசு ஊழியராவார். இவரது மகன் கஸ்தூரி மகாலிங்கம். இவர் பிளஸ் 2 முடித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு தமிழகத்தில் உள்ள தேர்வு மையத்தை தேர்ந்தெடுத்தும் அந்த மாணவருக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கஸ்தூரி மகாலிங்கம், தனது தந்தை கிருஷ்ணசாமியுடன் நேற்று எர்ணாகுளம் சென்றடைந்தார்.

அங்கு ஹோட்டல்களில் தங்கும் அறை கிடைக்காமல் அவர்கள் நீண்ட நேரம் அலைக்கழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு வழியாக விடுதி கிடைத்தும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு பின்னர் சரியானது.
இந்நிலையில் இன்று காலையும் எர்ணாகுளத்தில் சம்மணத்தில் உள்ள நாலந்தா பப்ளிக் பள்ளியில் ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்தை தேடி அலைந்து திரிந்தனர். பின்னர் ஒரு வழியாக தேர்வு மையத்துக்கு வந்து தனது மகனை உள்ளே அனுப்பிவிட்டு அங்கு ஒரு இடத்தில் கிருஷ்ணசாமி அமர்ந்திருந்தார்.
அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து சிறிது நேரத்தில் அவர் இறந்தார். இதையடுத்து அவரது உடல் அங்குள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் வேறு யாரும் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த விவரம் தெரியாமல் மகன் தேர்வு எழுதுவதை அறிந்த மற்ற பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர். இது முழுக்க முழுக்க அலைக்கழிப்பு, மனவேதனையால் ஏற்பட்ட மாரடைப்பு என்று பெற்றோர் கூறியுள்ளனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications