14 வயது மகளை கர்ப்பமாக்கிய தந்தை மீது பாய்ந்தது போக்சோ
14 வயது மகளை கர்ப்பமாக்கிய தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
Recommended Video

ஒட்டன்சத்திரம்: பெற்ற மகளையே மகளையே கட்டாயப்படுத்தி, மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து வந்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம் அருகே உள்ளது நரிப்பட்டி என்ற கிராமம். இங்குள்ள தனியார் மில் ஒன்றில் கூலி வேலை செய்து வருபவர் பாலமுருகன். இவருக்கு ஜோதி என்ற மனைவியும் 14 வயதில் ஜோதி என்ற ஒரு மகளும் உள்ளனர். மகள் திண்டுக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

மிரட்டிய தந்தை
இவர் எப்போதெல்லாம் தனிமையில் இருக்கிறாரோ அப்போதெல்லாம் பாலமுருகன் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதுபோல் பலமுறை செய்து வந்துள்ள நிலையில், வெளியில் சொன்னால் கொலையே செய்து விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார்.

உடல்நிலையில் மாற்றம்
முக்கியமாக மனைவி ஊருக்கு போகும் சமயத்தில் எல்லாம் பாலமுருகன் மகள் ஜோதியிடம் இப்படி நடந்து கொண்டுள்ளார். ஆனால் விஷயம் வெளியே தெரிய ஆரம்பித்தது. மகளின் உடல்நிலையில் நாளுக்கு நாள் மாற்றம் வருவதை தாய் கவனித்தார்.

அதிர்ந்த தாய்
அதனால் மகளை கூப்பிட்டு என்ன ஆச்சு என்று விசாரித்தார். அப்போதுதான் மகள் அப்பாவை பற்றி சொல்லி கதறி அழுதார். இதை கேட்டு அதிர்ந்த தாய், உடல்நலம் மோசமாகி இருக்கும் மகளை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

போக்சோ சட்டம்
அங்கே பரிசோதனை செய்த டாக்டர், ஜோதி கர்ப்பமாக இருக்கிறார் என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த தாய், உடனடியாக ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து 14 வயது மகளை கர்ப்பிணியாக்கிய தந்தையை போலீசார் போக்சோவில் கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications