பெரா வழக்கு: கேள்விகளை முன்கூட்டியே கேட்ட சசிகலாவின் கோரிக்கை நிராகரிப்பு
அமலாக்கத்துறை சார்பில் கேட்கப்படும் கேள்விகளை முன்கூட்டியே அளிக்க தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை ஹைகோர்ட் நிராகரித்துள்ளது.
சென்னை: அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் கேட்கப்படும் கேள்விகளை முன்கூட்டியே அளிக்க சசிகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை எழும்பூர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ஜெ.ஜெ.டிவிக்கு அப்லிங்க் வசதிகளை ஏற்படுத்தியதிலும், கருவிகளை வாடகைக்கு எடுத்ததிலும் விதிகளை மீறி பல கோடி அன்னிய செலாவணி மோசடி செய்ததாக சசிகலா மீது 1996ம் ஆண்டு அமலாக்கப்பிரிவு வழக்கு தொடர்ந்தது. இதில் சசிகலா உறவினர் பாஸ்கரன், மற்றும் டிடிவி தினகரனும் முக்கிய குற்றவாளிகளாக உள்ளனர்.

இந்த வழக்கு சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் பாஸ்கரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் குற்றத்தை மறுத்ததால் அமலாக்கதுறை தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா பெங்களூரு சிறையில் இருப்பதால் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது.
இந்நிலையில் பெங்களூர் பரப்பனா அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா தன் மீதான விசாரணையை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தும்படி மனு ஒன்றை தாக்கல் செய்தார். நீதிபதி ஜாகிர் ஹுசைனும் வீடியோ கான்பரன்ஸ்க்கு அனுமதி அளித்தார்.
அத்துடன் சசிகலா தரப்பில் தமிழ் மொழியில் விசாரணை நடத்தவும், அமலாக்கதுறை சார்பில் கேட்கப்படும் கேள்விகளை முன்கூட்டியே அளிக்க வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டது. அதற்கு அமலாக்கத்துறை வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது நீதிபதி எதிர்ப்பு தெரிவித்தால் அதன் காரணத்தை எழுத்து பூர்வமாக அளிக்க கூறினார்.
இந்த வழக்கு 6ஆம் தேதிக்கு நீதிபதி ஜாகிர் ஹுசைன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கேள்விகளை முன்கூட்டியே அளிக்க வேண்டும் என்று அளிக்கப்பட்ட மனு மீதான தீர்ப்பு வரும் 12ம் தேதி அளிக்கப்படும் என்று கூறி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், சசிகலாவின் கோரிக்கையை நிராகரித்தது. வழக்கில் கேட்கப்படும் கேள்விகளை முன்கூட்டியே அளிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications