3வது முறையாக சிறுதாவூர் பங்களாவில் தீ விபத்து.. தீயணைப்பு படையினர் விரைவு
சிறுதாவூர் கிராமத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தங்கி இருந்த பங்களாவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்: சிறுதாவூர் கிராமத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தங்கி இருந்த பங்களாவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா தங்கி ஓய்வெடுத்த பங்களாக்களில் முக்கியமானது காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகில் உள்ள சிறுதாவூர் கிராமத்தில் உள்ள பங்களா. இதில் பலமுறை ஜெயலலிதா தங்கி ஓய்வெடுத்துள்ளார்.

அவர் தனது தோழி சசிகலாவுடன் தங்கி ஓய்வெடுத்துள்ளார். சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் சவுக்குமரங்கள் மற்றும் வயல்வெளிகள் இந்த பங்களா அருகில் உள்ளது. இந்நிலையில், இன்று பங்களாவில் உள்ள ஒரு பகுதியில் திடீரென தீப்பற்றி உள்ளது.
இந்த தீ மிகவும் பெரிய அளவில் பரவி வருகிறது. தீயை அணைக்க தீயணைப்பு படையினர் விரைந்துள்ளனர். அருகில் உள்ள காடுகளுக்கு தீ பரவாத வகையில் தீயை அணைக்க முயற்சித்து வருகிறார்கள்.
கடந்த வருடம் இதே சிறுதாவூர் பங்களாவில் இரன்டு முறை தீ விபத்து ஏற்பட்டது. இப்போது மூன்றாவது முறையாக அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
-
Latha in ADMK: அதிமுகவில் நடிகை லதா ஐக்கியம்! எம்ஜிஆர் கட்சி தொடங்கிய போதே 3வது பெண்ணாக இணைந்தவர்! -
ஜெயலலிதாவுக்கு முன்பே அதிமுகவில் இணைந்த நடிகை லதா! அமைச்சராக வேண்டியவர்! யார் இவர்? -
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம் -
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை












Click it and Unblock the Notifications