சென்னையில் பரபரப்பு.. ஓடும் ஆம்னி பஸ்ஸில் திடீர் தீ.. பயணிகள் இல்லாததால் பேராபத்து தவிர்ப்பு!
சென்னை: சென்னையில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு காலியாக வந்த ஆம்னி பேருந்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாரும் இல்லாததால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.
சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பேசின்பிரிட்ஜ் நெடுஞ்சாலையில் நேற்று மதியம் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை தரமணியைச் சேர்ந்த சண்முகநதி (35) என்பவர் ஓட்டி வந்தார். பேருந்து வியாசர்பாடி பில்லர் அருகே சென்று கொண்டிருந்தபோது அதிலிருந்து இருந்து திடீரென புகை கிளம்பியது. இதை பார்த்த டிரைவர் உடனே சாலையோரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கி விட்டார்.
பேருந்தின் பின்புறத்தில் பிடித்த தீ அப்பகுதி முழுவதும் பரவத்தொடங்கியது. இதில் பின்புற இருக்கைகள் அனைத்தும் தீயில் கருகின. உடனே இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர் ஆகிய இடங்களில் இருந்து 2 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், பேருந்தில் ஏற்பட்ட மின்கசிவே காரணம் என தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications