'அது சரி என்றால், இதுவும் சரி தான்' திமுகவை அதிரவைத்த முதல்வர் பழனிச்சாமியின் பதில்கள்
கள்ளக்குறிச்சி: உள்ளாட்சி தேர்தலில் மறைமுக தேர்தலை நீங்கள் கொண்டுவந்தால் சரி, நாங்கள் கொண்டுவந்ததால் தவறா என்று திமுகவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதிதாக உதயமாகி உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தொடக்க விழா கள்ளக்குறிச்சியில் நேற்று காலை நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசும் போது உள்ளாட்சி தேர்தல் குறித்த மறைமுக தேர்தல் ஏன் என்பது குறித்தும் பேசினார். அந்த பதிலில் திமுகவை கடுமையாக சாடி கேள்விகளை எழுப்பி இருந்தார்.
இது தொடர்பாக முதல்வர் கூறுகையில், உள்ளாட்சி தேர்தல் இன்றைக்கு நடைபெறுமா?, நடைபெறாதா? என ஒரு சந்தேகத்தை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பியபடி உள்ளார். தமிழகத்தில் நிச்சயமாக உள்ளாட்சி தேர்தல் நடக்கும். அதற்கான ஆயத்தப்பணிகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து கொண்டே உள்ளது.

திமுக தான் அறிமுகம்
1996-ம் ஆண்டு வரை மறைமுக தேர்தல் தான் தமிழ்நாட்டில் நடந்த வந்தது. 1996ல் (அப்போது) தி.மு.க. ஆட்சி வந்தபோது, மு.க.ஸ்டாலின் முதன் முதலாக நேரடி தேர்தலை சந்தித்தார் என்பதை அவர் மறந்து விட்டு பேசுகிறார். அதன்பிறகு மறைமுக தேர்தல் கொண்டு வந்ததும் அவரே தான். நீங்கள் தான் மறைமுக தேர்தல் அறிவித்தீர்கள். மறைமுக தேர்தலுக்கு சட்டசபையில் விளக்கம் கொடுத்தீர்கள்.

மக்கள் ஓட்டு
ஆனால் தற்போது ஏன் மறைமுக தேர்தலை சந்திக்க தயங்குறீங்க. மக்கள் ஓட்டு போட்ட பிறகு தான் கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கவுன்சிலர்கள் தான் தலைவரை தேர்ந்தெடுக்க போகிறார்கள். அதில் என்ன தவறு உள்ளது.

இதுவும் சரிதான்
நீங்கள் (திமுக) கொண்டு வந்தால் சரி, நாங்கள் கொண்டு வந்தால் தவறா?. தவறு என்றால் நீங்கள் 2006-ம் ஆண்டில் கொண்டு வந்ததும் தவறா?, தவறான திட்டத்தை தான் நடைமுறைப்படுத்தினீர்களா? அது சரி என்றால், இதுவும் சரி தான்" என பதில் அளித்தார்.

மறைமுக தேர்தல்
முன்னதாக ''தற்போதைய மறைமுக தேர்தல் என்பது சர்வாதிகார செயல்பாட்டுக்கு உதாரணம். 2006 இல் அப்போது இருந்த அரசியல் சூழலால் மறைமுக தேர்தலை நடத்தினோம். மறைமுக தேர்தல் குறித்து அமைச்சரவையில் எதுவும் பேசவில்லை என துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியிருந்தார். இந்த நிலையில் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மறைமுகமாக தேர்ந்தெடுக்க அதிமுக அவசர சட்டத்தை கொண்டு வந்தது கண்டனத்துக்குரியது" என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications