”குழந்தையா? மீனா?” அலங்காநல்லூரில் வினோத குழந்தை
மதுரை: மதுரையை அடுத்த அலங்காநல்லூரில் மீன் வடிவத்தில் பிறந்துள்ள அதிசய குழந்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம் பாலமேடு அருகே உள்ள சத்திரவெள்ளாளபட்டியை சேர்ந்தவர் சதீஸ்குமார் .இவரது மனைவி துர்காதேவி. இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளது.
இந்த நிலையில் 4 ஆவதாக துர்கா தேவி கர்ப்பம் அடைந்தார். பிரசவ வலி ஏற்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நேற்று காலை குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு இடுப்பு பகுதிக்கு கீழ் ஆண் பெண் பாலின வேறுபாடு இன்றி "மீன்வால்" போன்ற உருவ அமைப்பில் காணப்பட்டது.
பிறந்த இந்த குழந்தையை உடனடியாக மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு தூக்கி வந்து விட்டனர். இது குறித்த பாலமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கேட்ட போது சுகாதார ஆய்வாளர் மனோகரன் , " இந்த குழந்தை முழு வளர்ச்சி பெறாததால் உடல் உறுப்புகள் குறைபாடுகளுடன் பிறந்துள்ளது.
இதை பார்வையிட்டு நேரில் ஆய்வு செய்தோம். தொடர்ந்து 10 ஆவது மாதத்தில் சுகப்பிரசவமாக பிறந்த இந்த குழந்தை தற்போது முழு வளர்ச்சியின்றி ஒரு கை குட்டையாக 2 விரல்களுடனும் மற்றொரு கையில் 6 விரல்களுடனும் இடுப்புக்கு கீழ்பகுதி ஆண் பெண் உறுப்புகள் இன்றி மீன் வால் போன்று அமைப்பில் உள்ளது. இந்த குழந்தை இதுவரை உயிரோடுதான் உள்ளது" என்றார்.
இந்த பெற்றோர்களுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ளது. மீன் வடிவத்தில் பிறந்த இந்த அதிசய குழந்தையை சுற்று வட்டார கிராம பொதுமக்கள் சென்று பார்த்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications