இலங்கையின் நரவேட்டைக்கு பிரிட்ஜோவின் உயிரே கடைசியாக இருக்கட்டும்- மீனவர்கள் ஆவேசம்
இலங்கை கடற்படையினரின் நரவேட்டைக்கு தங்கச்சிமடம் பிரிட்ஜோவின் உயிரே கடைசியாக இருக்க வேண்டும் என்று மீனவர்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினர் காட்டுமிரண்டித்தனமாக துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் பிரிட்ஜோவின் உயிரே கடைசியாக இருக்க வேண்டும் என்று தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் கொந்தளிப்புடன் தெரிவித்தனர்.
கச்சத்தீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே உள்ள கடல்பகுதியில் 6 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வாட்டர் ஸ்கூட்டரில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர்.

இதில் பிரிட்ஜோ என்ற மீனவர் கழுத்தில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். மேலும் சரோன் என்பவர் கையில் காயம் ஏற்பட்டது.
இச்சம்பவம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நீதி கிடைக்கும் வரை பிரிட்ஜோவின் அவரது உடலை வாங்க மாட்டோம் என்று மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் ராமேஸ்வரத்தில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கை கடற்படை வீரர்களை கைது செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை உடனடியாக மூட வேண்டும், அதில் உள்ள அதிகாரிகளை திருப்பி அனுப்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும் இந்த சம்பவம் குறித்து மத்திய அமைச்சர் யாரேனும் வந்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும், அதுவரை பிரிட்ஜோவின் உடலை வாங்க மாட்டோம். இலங்கை கடற்படையின் நரவேட்டைக்கு பிரிட்ஜோவின் உயிரே கடைசியாக இருக்க வேண்டும். இழப்பீடுக்காக நாங்கள் போராடவில்லை. இழப்பீடு கொடுத்து எங்களை கொச்சப்படுத்தாதீர் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications