For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாலியல் புகார்... 3 பேராசிரியர்களிடம் வேளாண் பல்கலைக்கழக ஐவர் குழு விசாரணை

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: பாலியல் புகார் தொடர்பாக 3 பேராசிரியர்களிடம் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இருந்து ஐவர் குழு திருவண்ணாமலை கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்துகிறது.

திருவண்ணாமலை தண்டராம்பட்டில் உள்ள அரசு வேளாண் கல்லூரியில் சென்னை மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து விடுதி வார்டன்களான மைதிலி மற்றும் புனிதா ஆகியோரிடம் புகார் கொடுத்துள்ளார்.

Five members committee from Coimbatore university interrogates 3 professors

இதையடுத்து விடுதி வார்டன்களும் தங்கப்பாண்டியன் சாரின் ஆசையை நிறைவேற்று என்று மாணவியை மிரட்டியதால் அவரது பெற்றோரிடம் புகார் அளித்தார். கல்லூரியை முற்றுகையிட்ட பெற்றோர் கல்லூரி முதல்வர் ராஜேந்திரனிடம் புகார் மனு கொடுத்தனர்.

இந்நிலையில் மாணவியை புனிதாவும், மைதிலியும் மிரட்டும் ஆடியோக்கள் நேற்று வெளியானது. அதில் புரோக்கரை விட கேவலமாக தங்கப்பாண்டியனுக்காக வரிந்து கட்டி பேசி பேராசிரியர் பணியின் புனிதத்தை கெடுத்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட நீதிபதி மகிழேந்தி நேற்று விசாரணை நடத்தினார். இதையடுத்து கோவை வேளாண் பல்கலைக்கழகத்திலிருந்து 5 பேர் கொண்ட குழுவினர் தண்டராம்பட்டு கல்லூரிக்கு சென்று 3 பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தவுள்ளனர்.

English summary
Five members committee constituted from Coimbatore Agricultural college investigates professors Thanpandiyan, Punitha and Mythili.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X