அம்மா உணவகத்தில் பிரியாண விருந்தா? - பறக்கும் படை சோதனையால் பரபரப்பு
தூத்துக்குடியில் அரசு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்தில் தேர்தலை முன்னிட்டு விதிமுறைக்கு புறம்பாக அசைவ விருந்து வழங்கப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை தாசில்தார் வள்ளி கண்ணு தலைமையிலான அதிகாரிகள் அங்கு சென்று சோதனையிட்டனர்.
இதில் அங்கு அசைவ உணவு எதுவும் வழங்கப்படவில்லை என தெரிய வந்தது. அரசு அறிவித்துள்ள உணவுகள் மட்டுமே வழங்கப்பட்டது தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகள் சோதனை முடிந்து திரும்பி சென்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடஙகளில் தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக ஆளும்கட்சியை தவிர்த்து பிற கட்சிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்வதாக புகார் எழுந்துள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சியினர் எதிர்பார்க்கின்றனர். அம்மா உணவகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.