மக்கள் கலை இலக்கிய கழக நிர்வாகி கோவன் கைது: உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
திருச்சி: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுமாறு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 'மக்கள் கலை இலக்கிய கழக' நிர்வாகி கோவன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். அவரை விடுவிக்க வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
போராட்டத்தின் ஒரு பகுதியாக, "மூடு டாஸ்மாக்கை மூடு', ' ஊத்திக் கொடுத்த உத்தமி போயசில் உல்லாசம்" என்ற இரண்டு பாடல்கள் ஒரு இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது.இந்த பாடல் வரிகளுக்கான வீடியோவில் முதலமைச்சர் ஜெயலிதாவின் படம் மற்றும் வீடியோ பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை 2.30 மணிக்கு திருச்சியில் உள்ள கோவன் வீட்டிற்குச் சென்ற சென்னை குற்றப் பிரிவு போலிசார் அவரைக் கைது செய்தனர். தமிழக அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடும் வகையிலும், தமிழக அரசின் மது விலக்கு கொள்கையை கொச்சைப்படுத்தும் வகையிலும் இந்த பாடல் அமைந்துள்ளதாகக் கூறி, அவர் மீது, 124 ஏ தேசத்துரோக நடவடிக்கை, 153 சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையில் மோதல் ஏற்படுத்துதல், 502/1 அவதூறு செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் கோவனை கைது செய்த போலீசார் அவரை எங்கு வைத்துள்ளனர் என்று கூற மறுத்துவிட்டனர்.
இந்நிலையில், கோவன் இருக்கும் இடம் குறித்து காவல்துறையினர் தெரிவிக்க மறுத்ததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சார்பில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குடிச்சுப் போட்ட பாட்ல தூக்கி எடைக்கி போட்டானாம்.....எடைக்கி போட்ட காச வாங்கி குடிச்சி போட்டானாம்......!!!












Click it and Unblock the Notifications