சென்னையில் விற்பனை செய்யப்பட்ட கஞ்சா சாக்லேட் பறிமுதல்: அதிகாரிகள் அதிரடி
சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள கடையில் 20 போதை சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டை சுந்தரம்பிள்ளை நகரில் உள்ள கிருஷ்ணா ஸ்டோரில் இருந்து போதை சாக்லேட்டுகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை தண்டையார்பேட்டையில் பட்டேல் நகரில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் படித்து வரும் 13 வயது சிறுவன் பரத். இவனும், இவனது நண்பர்கள் இருவரும் அருகில் இருக்கும் கடை ஒன்றில் சாக்லேட் வாங்கி சாப்பிட்டுள்ளனர். இவர்களில் பரத்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு தற்போது எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

இந்த மாணவனை நேற்று சுகாதார நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டனர். தண்டையார்பேட்டை பகுதி முதல்வர் ஜெயலலிதாவின் ஆ.கே. நகர் தொகுதிக்கு உட்பட்டது என்பதால் பரபரப்பு அதிகமானது.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் புகாரையடுத்து ஆர்கே நகர் காவல்துறையினர் போதை சாக்லேட் விற்ற கடையில் இருந்த சாக்லேட்டுகளை பறிமுதல் செய்து கடைக்கு பூட்டு போட்டனர். இந்தக் கடையை நடத்தி வந்த சுரேஷ் பகதூர் என்பவரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தண்டையார் பேட்டை கடைகளில் இன்றும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தமிழகம் முழுவதும் பள்ளியை சுற்றியுள்ள கடைகளில் ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
சாக்லேட்டில் போதைப்பொருள் கலந்துள்ளதா என்பது குறித்து இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி துறை சார்ந்த, மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். உணவு பாதுகாப்புத்துறையும் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ஆயுர்வேத மருத்துவத்துறைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே இன்று நடைபெற்ற சோதனையில் தண்டையார்பேட்டை சுந்தரம்பிள்ளை நகரில் உள்ள கிருஷ்ணா ஸ்டோரில் இருந்து போதை சாக்லேட்டுகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications