சேலத்தில் போக்குவரத்து விதிமுறை மீறல்.. வன அதிகாரி போலீசுடன் கடும் வாக்குவாதம்.. பாய்ந்த ஆக்சன்
சேலம்: சேலத்தில் போக்குவரத்து விதிமுறையை மீறியதுடன் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுட்டதாக வனத்துறை அதிகாரிக்கு ரூ.2,700 அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
ஒரு வழிப்பாதையில் ஹெல்மெட் அணியாமல், டிரைவிங் லைசென்ஸ் எடுத்து வாராமல் வாகனம் ஓட்டிய வன அதிகாரிக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.

சேலம் அஸ்தம்பட்டி ஆத்துக்காடு பகுதியை சேர்ந்த 55 வயதாகும் சரவணன், தர்மபுரி மாவட்டம் அரூரில் உதவி வன பாதுகாவலராக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் சேலம் குகையில் உள்ள ஒரு தனியார் மருத்துமவனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திங்கள்கிழமை காலை மனைவி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால் அவரை அழைத்துக் கொண்டு சரவணன் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டார். அங்கிருந்து சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே வந்த அவர் ஒருவழிப்பாதையில் போக்குவரத்து விதியை மீறி மோட்டார் சைக்கிளில் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது அந்த வழியாக சாலையில் சென்ற பெண் மீது உதவி வன அலுவலர் சரவணனின் இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக மோதிவிட்டது. இதனால் அந்த பெண் நிலைதடுமாறி சாலையில் கீழே தவறி விழுந்தார். உடனே சரவணன் தனது மோட்டார் சைக்கிளை சாலையின் நடுவில் நிறுத்திவிட்டு அந்த பெண்ணை தூக்க முயன்றுள்ளார்..
இந்த சம்பவத்தை கலெக்டர் அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பார்த்து விரைந்து சென்றனர். அப்போது அவர்கள், ஒருவழிப்பாதையில் இருசக்கர வாகனத்தில் எப்படி வரலாம்? என்று உதவி வன அதிகாரி சரவணனிடம் கேள்வி கேட்டனர். இதையடுத்து அவரின் இருசக்கர வாகனத்தையும் போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். அதற்கு சரவணன் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது சரவணன் மற்றும் போலீசார் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து இருசக்கர வாகனத்தை அப்புறப்படுத்திய போலீசார் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதிக்கு எடுத்து வந்தார்கள். பின்னர் ஹெல்மெட் அணியாதது, ஒருவழிப்பாதையில் வந்தது, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது என போக்குவரத்து விதிகளை மீறிய காரணத்தால் ரூ.2,700 அபராதத்தை அவருக்கு போலீசார் விதித்தார்கள்.
இதையடுத்து உதவி வன பாதுகாவலர் சரவணன், போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக அங்கிருந்த போலீசாரிடம் மன்னிப்பு கேட்டார். இதையடுத்து அபராத தொகையை நீதிமன்றத்தில் கட்டுமாறு கூறி அதற்குரிய ரசீதை உதவி வன பாதுகாவலரிடம் போலீசார் வழங்கினர். பின்னர் அவர் தனது மனைவியை அழைத்துக்கொண்டு அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications