செங்கம் அருகே மணல் அள்ளியவர் மர்ம மரணம்- வனத்துறை ஊழியர் மீது சரமாரி தாக்கு- வாகனம் தீ வைப்பு!!
செங்கம் அருகே திருமலை என்பவரின் மர்ம மரணத்துக்கு காரணமானவர் என சந்தேகிக்கப்படும் வனத்துறை ஊழியர் சரமாரியாக தாக்கப்பட்டார்.
திருவண்ணாமலை: செங்கம் அருகே மணல் அள்ளிய திருமலை என்பவர் வனத்துறை ஊழியர்களால் அடித்துக் கொல்லப்பட்டதாக பதற்றம் ஏற்பட்டுள்ளது. திருமலையின் மரணத்துக்கு காரணம் என கருதப்படும் வனத்துறை ஊழியர் தாண்டவராயனை பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர். வனத்துறைக்கு சொந்தமான இருசக்கர வாகனத்துக்கும் தீ வைத்து எரிக்கப்பட்டாது.
செங்கம் அருகே மேல்புழுதியூர் வனப்பகுதியில் சந்தனகவுண்டன் புதூரைச் சேர்ந்த திருமலை என்பவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மணல் அள்ளும்போது வனத்துறையினர் தாக்கியதால் திருமலை இறந்தார் என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு.

இதனையறித்து மேல்புழுதியூர் வனப்பகுதிக்கு பொதுமக்கள் திரண்டனர். அங்கு திருமலை இறந்து கிடந்ததை கண்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரது மரணத்துக்கு காரணம் என கூறி வனத்துறை ஊழியர் தாண்டவராயனை சரமாரியாக தாக்கினர்.
பெண்கள் தாண்டவராயனை கீழே தள்ளிவிட்டு மிதித்தனர். போலீசார் தாண்டவராயனை பொதுமக்களிடம் இருந்து மீட்டுச் சென்றனர். ஆத்திரம் தணியாத பொதுமக்கள் வனத்துறைக்குச் சொந்தமான இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்து எரித்தனர். இதனால் செங்கம் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications