இணை செயலாளர்கள் அறிவிப்பில் பாஜகவின் செயல்பாடு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது: ப.சிதம்பரம்
இணை செயலாளர்கள் அறிவிப்பில் பாஜகவின் செயல்பாடு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: அரசுத் துறைகளில், இணைச் செயலாளர் பதவிகளில் நேரடியாக வெளியாட்களை நியமிக்கும் பாஜகவின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நிர்வாகத்தில் இணை செயலாளர்கள் நிலையிலான 10 அதிகாரிகளை நேரடியாக நியமனம் செய்வதற்கான விளம்பர அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

தனியார் துறைகளில் அனுபவம் பெற்ற நிபுணர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று பிரத்யேக விளம்பரமும் நாளிதழ்களில் வெளியிடப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை ஆர் எஸ் எஸ் மற்றும் சங் பரிவாருக்கு ஆதரவானது என்று ஸ்டாலின், வைகோ, ராமதாஸ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், பாஜகவின் இந்த நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறை மிகவும் தவறானது. அவ்வாறு நியமிக்கப்படுபவர்கள் ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜகவிற்கு வேண்டியவர்களாகவே இருப்பார்கள்.
அப்படி பதவிக்கு வருபவர்கள் மக்களுக்காகப் பணியாற்றமாட்டார்கள். இது நாட்டின் நலனுக்கு முற்றிலும் எதிரானது. இந்த முறை குறித்து மத்திய அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications