நெல்லை மருத்துவமனையில் திடீர் "ஃபவுன்டைன்".. நோயாளிகள் அவதி.. அதிகாரிகளுக்கோ ஷாக்!
நெல்லை: நெல்லை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்ைசப் பிரிவில் திடீர் என நீர் ஊற்று தோன்றியுள்ளதால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கான காரணம் தெரியாமல் அதிகாரிகள் திகைத்து போய் உள்ளனர்.
நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் நோயாளிகளுக்கு கீழ்தளத்தில் தனிபிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பிரிவில் தினமும் ஏராளமானோர் சிகி்ச்சை பெற்று வருகின்றனர்.
நெல்லையில் பெய்யும் கன மழை காரணமாக மாலை திடீரென நுண்கதிர் சிகிச்சை பிரிவின் கீழ் பகுதியில் தரைதளத்தில் நீ்ர் ஊற்று தோன்றி அறை முழுவதும் தண்ணீர் தேங்கியது. இதை பார்த்த அங்குள்ள பணியாளர்கள் திகைத்தனர். இதையடுத்து அங்கு சிகிச்சை அளிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சிகிச்சை நிறுத்தப்பட்டதால் நோயாளிகள் சிகி்ச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து பல்கலைகழக டீன் சித்தி அத்திய முனைவரா கூறுகையில், நெலலை அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு கருதி கேன்சர் நோயாளிகளுக்கு கட்டிடத்தின் கீழ் பகுதியில் (அன்டர்கிரவுண்ட்) அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதுவரை மழைக்காலத்தில் இங்கு தண்ணீர் ஊற்று ஏற்பட்டதில்லை.
ஆனால் இப்போது திடீரென நீர் ஊற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அஙகு சிகிச்சை அளிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் விலை உயர்ந்த கருவிகள் பாதுகாக்கப்பட்டது. தற்போது தண்ணீரை வெளியேற்றியதுடன் வருங்காலத்தில் இது போன்று நிகழாமல் இருக்க பொதுப் பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றார் அவர்.













Click it and Unblock the Notifications