கெத்து காட்டிய தினகரனுக்கு கடைசி நேரத்தில் 'பெப்பே' சொன்ன 4 எம்.எல்.ஏக்கள்?

தினகரன் முகாமில் இருந்து கடைசி நேரத்தில் 4 எம்.எல்.ஏக்கள் ஈபிஎஸ் அணிக்கு தாவியிருக்கின்றனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    துணை முதல்வராகும் ஓபிஸ்?-வீடியோ

    சென்னை: அதிமுக தொண்டர்கள், எம்.எல்.ஏக்கள் தம் பக்கம் இருப்பதாக கெத்து காட்டி வந்த தினகரன் முகாமில் இருந்து 4 எம்.எல்.ஏக்கள் எஸ்கேப்பாகிவிட்டனர்.

    மேலூரில் தினகரன் 'ஏற்பாடு செய்த' கூட்டத்தை வைத்துக் கொண்டு எகத்தாளமாகவே அந்த அணியினர் பேசிவந்தனர். அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் பக்கம் இருப்பதாக கூறிக் கொண்டனர்.

    20 எம்.எல்.ஏக்கள்

    20 எம்.எல்.ஏக்கள்

    முதலில் 40 எம்.எல்.ஏக்கள் தங்கள் பக்கம் என மார்தட்டினர். ஆனால் மேலூர் கூட்டத்தில் 20 எம்.எல்.ஏக்கள்தான் பங்கேற்றனர். இதனால் தினகரனுக்கு 20 எம்.எல்.ஏக்கள் ஆதரவு என்பது உறுதியாக இருந்தது.

    அடையாறில் ஆலோசனை

    அடையாறில் ஆலோசனை

    இந்த நிலையில் அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைவது உறுதியாகிவிட்டது. இப்படியெல்லாம் நடக்கவே நடக்காது என கூறிவந்த தினகரன் தரப்பு இன்று சென்னை அடையாறு இல்லத்தில் ஆலோசனை நடத்தியது.

    16 எம்.எல்.ஏக்கள்

    16 எம்.எல்.ஏக்கள்

    காலை முதல் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வாக தனித்தனியே வர தினகரன் தரப்புக்கு திகிலாகிவிட்டது. 8 எம்.எல்.ஏக்கள்தான் முதலில் வந்தனர்... இரண்டு மணிநேரம் கடந்த நிலையில் அதிகபட்சமாக 16 எம்.எல்.ஏக்கள் தினகரன் வீட்டில் முகாமிட்டனர்.

    4 எம்.எல்.ஏக்கள் எஸ்கேப்

    4 எம்.எல்.ஏக்கள் எஸ்கேப்

    தினகரனை ஆதரிப்பதாக சொன்ன 4 எம்.எல்.ஏக்கள், அணிகள் இணையும் நேரத்தில் அந்த முகாமில் இருந்து எஸ்கேப்பாகிவிட்டனர். இது தினகரன் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+