இலவசப் பொருட்களை திரும்பப் பெறும் அதிகாரிகள் – திருவண்ணாமலை மக்கள் புகார்
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ப்பட்டு கிராமத்தில் இலவசமாகக் கொடுக்கப்பட்ட மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களை வருவாய்த்துறை அதிகாரிகள் திரும்பப் பெற்றுக் கொள்வதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பொதுமக்களின் குடும்ப அட்டையில் மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது அந்தப் பொருட்களை வலுக்கட்டாயமாக வருவாய்த்துறை அதிகாரிகள் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் பொதுமக்கள் குறை கூறியுள்ளனர்.
இதுவரை 20 பேரிடமிருந்து விலையில்லா பொருட்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், இதனால் மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளாகியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications