அது 251 இல்ல ப்ரோ... "420".. ஆஹா ஓட்ட ஆரம்பிச்சுட்டாங்களே.. நிறுத்த மாட்டாங்களே!
சென்னை: மொத்த மக்களுக்கும் தற்போது பிடித்த எண் என்றால் அது 251 தான். சும்மாவே செல்போன் மோகம் பிடித்தாடும் மக்களுக்கு மலிவு விலையில் ஸ்மார்ட் போன் என்றால் ஒன்றுக்கு இரண்டாகத்தானே வாங்கத் தானே தோன்றும்.
அப்படித் தான், ‘ஃப்ரீடம் 251' போனை வாங்க வரிசை கட்டி நின்றார்கள் நம் மக்கள். ஆனால், ஆர்டர் அளித்த பின் தான், போன் 4 மாதங்களுக்குப் பிறகு டெலிவரி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைப் பார்த்து மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என இந்த மலிவு விலை போனை ஆர்டர் செய்ய முடியாதவர்களும், ஆர்டர் செய்தும் நான்கு மாதங்களுக்குப் பிறகு தான் கையில் போன் கிடைக்கும் என தெரிந்தவர்களும் தங்களது மனக்குமுறல்களை மீம்ஸ்களாக கொட்டித் தீர்த்து வருகின்றனர்.
வரும் ஆனா வராது...
ஒரு படத்தில் குறுகிய காலத்தில் வேலையே செய்யாமல் பணக்காரர் ஆவது எப்படி என வடிவேலுக்கு, பார்த்திபன் ஐடியா தருவார். அதை வைத்து இந்த மீம்ஸை தயாரித்துள்ளனர்.
காத்துட்டு இருக்கேன்...
தேசிய அளவு விசயம் என்றாலும், நம்மூர் ஆட்களையும் சேர்த்துக் கலாய்த்தால் தானே மீம்ஸ் கலைகட்டும். அப்படியாக இந்த மீம்ஸில் நாஞ்சில் சம்பத்தின், ‘காத்திட்டு இருக்கேன்'-ஐ, ஃப்ரீடம் 251 உடன் கோர்த்து விட்டுள்ளனர்.
அது 251 இல்லப்பா... 420
இவ்வளவு குறைவான விலைக்கு எப்படி ஸ்மார்ட் போனை விற்பனை செய்ய முடியும் என்ற பரவலான புகார்களும் குவிந்த வண்ணம் உள்ளன. இது அதுக்கான ஸ்பெஷல்.
அவசரப்பட்டுடீயேடா...
இது பார்த்திபன் - வடிவேலு ஸ்டைல். அவசரப்பட்டு அதிக விலைக்கு வாங்கிட்டியே...
வெப்சைட்டை எப்ப சார் தொறப்பீங்க...
பிரபா ஒயின்ஸ் விளம்பரக் காமெடியை வைத்து கலாய்த்துள்ளனர். உண்மையிலேயே இந்தப் போனை ஆர்டர் செய்ய இப்படித்தான் மக்கள் காத்திருந்தனர்.
என்ன பெருமை இது...
நாட்டில் எவ்வளவோ பொருளாதாரப் பிரச்சினை இருக்கும் போது, இது ரொம்ப முக்கியமா..?
இப்டித் தாங்க நடந்துச்சு...
நாட்டில் நடக்கும் சமூக ஏமாற்று வேலைகளைத் தொகுத்து ஒரே படமாகத் தந்தது தான் சதுரங்க வேட்டை. ஆசையைத் தூண்டுனால், யாரையும் எளிதில் ஏமாற்றி விடலாம் என்பதே இதன் தாரக மந்திரம்.
இங்க தான் நாம நிக்கிறோம்...
பேரம் பேசி வாங்குவதில் நமக்கு இணை நாமே தான். எவ்வளவு தான் விலைக் குறைத்துக் கொடுத்தாலும், அதிலும் குறைக்கச் சொல்லி பேரம் பேசி வாங்கினால் தான் நமக்கு திருப்தியே. பின்ன கஷ்டப்பட்டு சம்பாரிக்கறதை சும்மா தூக்கிக் கொடுக்க முடியுமா?