ராமேஸ்வரத்தில் பிரெஞ்சு பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து வம்பு - 3 மீனவர்கள் கைது
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்திற்கு வந்த 35 வயது பிரெஞ்சுப் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து வம்பு செய்த 3 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அந்தப் பெண்ணுக்கு 35 வயது இருக்கும். புதுச்சேரியில் கடந்த 25 வருடமாக வசித்து வருகிறார். ராமேஸ்வரத்திற்கு அவர் வந்திருந்தார்.
அப்போது வில்லுண்டு தீர்த்தம் பகுதியில் கடலில் குளிப்பதற்காக அவர் போயிருந்தார். அவருடன் இன்னொருவரும் வந்திருந்தார். அவர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது 3 மீனவர்கள் அங்கு வந்தனர். மூவரும் முட்ட முட்டக் குடித்திருந்தனர். குடிபோதையில் அந்த பிரெஞ்சுப் பெண்ணிடம் வம்பிழுக்க ஆரம்பித்தனர். தாறுமாறாகப் பேசியபடி கையைப் பிடித்து இழுத்துள்ளனர்.
இதையடுத்து இருவரும் அவர்களிடமிருந்து தப்பி ஓடி வந்தனர். பின்னர் டிஎஸ்பி விஜயக்குமாரைச் சந்தித்து அப்பெண் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து 3 மீனவர்களையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications