ஜி ஸ்கொயர்..ரூட் பிடித்த வருமான வரித்துறை அதிகாரிகள்..அண்ணாநகர் எம்எல்ஏ வீட்டில் அதிரடி ரெய்டு
சென்னை: நாட்டில் பல பகுதிகளில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் அண்ணா நகர் தொகுதி எம்எல்ஏ மோகன் வீட்டிலும் அவரது மகன் வீட்டிலும் ரெய்டு நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் உள்ள கமலாலயத்தில் திமுக பிரமுகர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார். அதில், திமுக அமைச்சர்கள், எம்.பிக்கள் உள்ளிட்டோரின் சொத்துப் பட்டியல்கள் வெளியாகின.
சுமார் 1.30 லட்சம் கோடி மதிப்பிலான சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த சொத்துப் பட்டியல் தொடர்பாக சிபிஐ அலுவலகத்தில் புகார் அளிக்கவுள்ளதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை முதலே ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50ற்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அண்ணாமலை ஜி ஸ்கொயர் மீது குற்றம் சாட்டியிருந்த நிலையில் தற்போது சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக அண்ணாநகர் சட்டசபை தொகுதி திமுக எம்எல்ஏ மோகன், அவரது மகன் கார்த்திக் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

கடந்த 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பாக இதே மோகன் வீட்டிலும் அவரது மகன் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த நிலையில் ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெறும் போது மீண்டும் திமுக எம்எல்ஏ மோகன் வீட்டில் ரெய்டு மேற்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications