எங்கள் நிறுவனத்திற்கும் திமுகவுக்கும் தொடர்பில்லை.. அண்ணாமலை கூறுவது பொய்.. ஜிஸ்கொயர் விளக்கம்
சென்னை: எங்கள் நிறுவனத்தில் வரி ஏய்ப்பு ஏதும் செய்யப்படவில்லை என ஜிஸ்கொயர் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அது போல் எங்கள் நிறுவனத்திற்கும் திமுக குடும்ப உறுப்பினர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஜிஸ்கொயர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
ஜிஸ்கொயர் நிறுவனம் திமுகவை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி வந்தார். மேலும் அந்த நிறுவனத்திற்கு ரூ 38 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்து இருப்பதாகவும் அவர் புகார் கூறியிருந்தார்.
மேலும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் ஜிஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரி துறை சோதனை நடத்தி வரும் நிலையில் ஜிஸ்கொயர் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஜிஸ்கொயர் விளக்கம்: இதுகுறித்து ஜிஸ்கொயர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பாவது: ஜிஸ்கொயர் நிறுவனத்தில் வரி ஏய்ப்பு எதுவும் செய்யப்படவில்லை. அது போல் அண்ணாமலை குறிப்பிட்டது போல் அதிக அளவிலான நிலங்களை கையகப்படுத்தவும் இல்லை.
படித்த தலைவர்: அண்ணாமலையின் செயலால் எங்கள் நிறுவனத்தின் மீது மக்கள் வைத்திருந்த மதிப்பு சிதைந்துள்ளது. படித்த தலைவர் இது போன்ற கருத்துகளை கூறியதால் அதை மக்கள் நம்பும் ஆபத்து உள்ளது. மேலும் ஜிஸ்கொயர் நிறுவனத்திற்கும் திமுகவின் குடும்ப உறுப்பினர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்களுடைய கட்டுப்பாட்டு எங்கள் நிறுவனம் இல்லை.
ஜோடிக்கப்பட்ட புகார்: எங்கள் நிறுவனத்திற்கு ரூ 38, 827.70 கோடி சொத்து இருப்பதாக அண்ணாமலை கூறிய தகவலும் தவறானது. உண்மைக்கு புறம்பானவை, அடிப்படை ஆதாரமற்றவை. அனைத்துமே ஜோடிக்கப்பட்டவையாகும். எங்கள் நிறுவனம் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே 2012 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்கள் நிறுவனத்தின் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. எங்கள் நிறுவனம் , பங்குதாரர்களின் திட்டங்களை தவறான தகவல்களை மதிப்புகளுடன் அண்ணாமலை சித்தரித்துள்ளார்.

கூட்டு முயற்சி: எங்களது பல கட்டுமான திட்டங்கள் பிற நிறுவனங்களின் கூட்டு முயற்சியுடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தவறான முறையில் எங்கள் நிறுவனம் சொத்து சேர்த்து வைத்துள்ளதாக நம்ப வைக்கும்படி ஜோடிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக ரியல் எஸ்டேட் துறையில் பல்வேறு வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளோம். என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் ஜிஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது.
-
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
கோவையின் அஸ்திவாரத்திலேயே கை வைத்த செந்தில் பாலாஜி.. மொத்தமாக மாறும் களம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
எகிறி அடிக்க ரெடியாகும் வில்லிவாக்கம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆப்பு! திமுக இறக்கிய முக்கிய ஆயுதம்! -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக -
"சாக்கடைக்கு சமமாக வந்து விழுகிற எடப்பாடியின் வார்த்தைகளுக்கு பாடம் புகட்டுவோம்”.. கொதித்த ஸ்டாலின்! -
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பன் என அறிவித்தது இதற்காகத்தான்.. கனிமொழி பிரசாரம்! -
முத்துராமலிங்கத் தேவரின் மறு உருவம் அண்ணாமலையா.. செல்லூர் ராஜு பேச்சால் கொந்தளித்த மாணிக்கம் தாகூர்!












Click it and Unblock the Notifications