கச்சத்தீவு: இலங்கைக்கு அளித்த சலுகை சட்டவிரோதமானது, திரும்பப் பெறுவதில் தவறில்லை- சரத்

Subscribe to Oneindia Tamil

Get back the rights of Kachchatheevu from Sri Lanka: Says Sarath Kumar
சென்னை: கச்சத்தீவு விவகாரத்தில் நாம் இலங்கைக்கு அரசியல் சட்டத்திற்கு புறம்பாக அளித்த சலுகையை திரும்பப் பெறுவது ஒன்றும் தவறல்ல என்று சமக தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சென்னை உயர் நீதிமன்றத்தில் கச்சத்தீவு தொடர்பான வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், இந்திய மீனவர்களுக்கு கச்சத்தீவு கடற்பகுதிகளில் மீன்பிடிக்க உரிமை இல்லை என்று கூறப்பட்டுள்ளது. நமக்கு உரிமையான பகுதி நமக்கு திரும்பக் கிடைக்க வேண்டும் என்ற நிலையில், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்பட்டால் தான் அது நியாயமானதாக இருக்கும்.

நடைபெற இருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கச்சத்தீவைத் திரும்பப்பெறும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இலங்கை அரசோடு பேசி கச்சத்தீவை உடனடியாக மீட்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருப்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். அதுவே தமிழக மீனவர்களின் பிரச்சினைகளை ஓரளவு குறைக்க உதவும் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.

வரலாறு காணாத வகையில் இனப்படுகொலை புரிந்த இலங்கைக்கு, உலகமே எதிராக குரல்கொடுத்து நடவடிக்கை எடுக்கத் தயாராகி வரும்போது நாம் அவர்களுக்கு அரசியல் சட்டத்திற்கு புறம்பாக அளித்த சலுகையை திரும்பப் பெறுவது ஒன்றும் தவறல்ல என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+