வேலூர்: நெல் அறுவடை இயந்திரத்தில் சிக்கி சிறுமி பலி

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே நெல் கதிரடிக்கும் இயந்திரத்தில் சிக்கி 5 ஆம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பத்தூர் அருகே உள்ள மேற்கத்தியனூரை சேர்ந்தவர் விவசாயி சிவக்குமார். இவரது 10 வயது மகள் ஜோதிகா புதுப்பட்டு தொடக்க பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

சிவக்குமார் தனது நிலத்தில் இன்று இயந்திரத்தின் மூலம் நெல் அறுவடை செய்துள்ளார். பள்ளி விடுமுறை என்பதால் இயந்திரத்தின் மூலம் நெல் அறுவடை செய்யப்படுவதை ஜோதிகா அருகில் நின்று பார்த்துள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக சிறுமி ஜோதிகா அணிந்திருந்த ஆடை நெல் அறுவடை இயந்திரத்தில் சிக்கியுள்ளது. இதில், ஜோதிகா நெல் அறுவடை இயந்திரத்திற்குள் இழுக்கப்பட்டு கை, கால்கள் துண்டான நிலையில் அதே இடத்தில் பரிதாபமாக பலியானார்.

Girl dies after being crushed by thresher

இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சிவக்குமாரும் கிராமத்தினரும், நெல் அறுக்கும் இயந்திரத்தை உடனே நிறுத்தி சிறுமி ஜோதிகாவின் உடலை மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் தாலுகா போலீசார் விரைந்து வந்த நெல் அறுவடை இயந்திர உரிமையாளர் மற்றும் அதன் ஓட்டுனரை கைது செய்து மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+