ஜல்லிக்கட்டுக்குத் தொடர் தடை.. உள்நோக்கம் உள்ளதா என சந்தேகம் வருகிறது- ஜி.கே.வாசன்
ஜல்லிக்கட்டுக்குத் தடை தொடர்வதில் உள்நோேக்கம் உள்ளதா என்றசந்தேகம் வந்துள்ளதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னை: பொங்கல் வாழ்த்துச் செய்திகள் வருவதற்கு முன்பு துயரச் செய்தி வந்துள்ளது. ஜல்லிக்கட்டுக்குத் தொடர்ந்து தடை நீடிப்பது, அதில் உள்நோக்கம் உள்ளதா என்ற சந்தேகத்தை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு சொல்ல முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறி விட்டது. இதனால் தமிழ்நாட்டு மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 3வது ஆண்டாக இந்த ஆண்டும் சட்டப்படி ஜல்லிக்கட்டை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இதுகுறித்துக் கூறுகையில், ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்சநீதிமன்றத்திலிருந்து வந்துள்ள அறிவிப்பு வேதனை அளிக்கிறது. பொங்கல் வாழ்த்து வர வேண்டிய நேரத்தில் துயரச் செய்தி வந்துள்ளது. மக்கள் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் ஜனநாயகம் இருக்க வேண்டும்.
தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெறத் தேவையான முயற்சிகளை மத்திய அரசு எடுத்திருக்க வேண்டும். மாநில அரசும் தக்க நேரத்தில் முறையாக அது நடப்பதற்கு வலு சேர்த்திருக்க வேண்டும். இது வேதனை தருவதாக உள்ளது.
ஒரு பக்கம் விவசாயிகள் வறட்சியில் வாடிக் கொண்டுள்ளனர். மறுபக்கம் பாரம்பரிய விளையாட்டுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இதில் உள்நோக்கம் உள்ளதா என்ற சந்தேகம் மக்களுக்கு வந்துள்ளது. இதை சரி செய்ய வேண்டியது உரியவர்களின் கடமையாகும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications