நாளை வேலை நிறுத்துப் போராட்டத்தில் தமாகா பங்கேற்காது... ஜி.கே.வாசன் திட்டவட்டம்!

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமாகா பங்கேற்காது என்று ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமாக பங்கேற்காது என்று அக்கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

வறட்சி நிவாரணம், விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 41 நாள்களாக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வரும் 25-ஆம் தேதி விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதால் , விவசாயிகள் போராட்ட்த்தை கைவிட்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

GK Vasan's party will not participate in strike

இந்நிலையில் டெல்லியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளின் கோரிக்கைகளை தான் பார்த்துக் கொள்வதாக தெரிவித்ததை அடுத்து போராட்டத்தை மே 25-ஆம் தேதி வரை தற்காலிகமாக விவசாயிகள் ஒத்திவைத்து நேற்று இரவு ரயில் மூலம் தமிழகத்துக்கு கிளம்பினர்.

இந்நிலையில் நாளை திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வேலைநிறுத்த போராட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என்று ஜி.கே.வாசன் தெரிவித்தார். அதேபோல் பாஜகவும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+