மக்கள் நல கூட்டணிக்கே திரும்பிய தமிழருவி மணியன்- சட்டசபை தேர்தலில் ஆதரவு
திருச்சி: தமிழகத்தில் 2016ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணிக்கு ஆதரவு அளிக்கப்படும் என காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். மக்கள் நல கூட்டு இயக்கம் தொடங்கிய போது மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து இருந்த காந்திய மக்கள் இயக்கம், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியேறியது.
தற்போது மீண்டும் மக்கள் நலக்கூட்டணிக்கே ஆதரவு தரப்போவதாக கூறியுள்ளார் தமிழருவி மணியன். அதே நேரத்தில் சட்டசபை தேர்தலில் 25 தொகுதிகளில் தனித்து போட்டியிடப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற இயக்கத்தின் நிறுவன தலைவர் தமிழருவி மணியன் செய்தியாளர்களிடம் பேசினார்.

எதிரி கட்சிகள்
'நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வரி சீர்திருத்தம் முக்கியமானது. எனவே, நடப்பு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் சரக்கு சேவை வரி மசோதாவை சட்டமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள், எதிரி கட்சிகள் போல இல்லாமல் ஆரோக்கியமாக செயல்பட வேண்டும்.

பீகார் தேர்தல் முடிவு
மதசகிப்பின்மை, மாட்டிறைச்சி விவகாரம், வி.கே.சிங்கின் தரக்குறைவான பேச்சு ஆகியவற்றால் பா.ஜ.க அரசுக்கு எதிராக நாடு முழுவதும் களம் அமைந்துள்ளது. இந்தியாவில் சகிப்புத்தன்மைக்கு மாறான நிலைப்பாட்டை கொண்டிருந்தால் அதற்கு எவ்வளவு பெரிய விளைவை சந்திக்க வேண்டும் என்பதை பிகார் தேர்தல் முடிவுகள் உணர்த்தியிருக்கின்றன.

வெள்ளை அறிக்கை
தமிழகத்தில் வெள்ளச் சேதங்களுக்கு காரணம் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புதான். தமிழகத்தில் மழை வெள்ளம் தடுப்பு பணி, வெள்ள மேலாண்மை திட்டத்திற்கு என பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், செயல்கள் எதுவும் நடக்கவில்லை. வெள்ளத்தடுப்பு பணி, மேலாண்மை திட்டத்திற்கு செலவிடப்பட்ட தொகை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

நிதி ஒதுக்கீடு தேவை
மானியங்களுக்காகவும், இலவசங்களுக்காகவும் ரூ.60,000 கோடியை ஒதுக்கீடு செய்யும் மாநில அரசு, தடுப்பணைகள் கட்டுவதற்காகவும், ஆறுகளை இணைக்கும் திட்டங்களுக்காகவும் போதிய நிதியை ஒதுக்கீடு செய்வதில்லை.

மது விலக்கு தேவை
தமிழகத்தில் மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்துவது என்பது இயலாத காரியம். எனவே 21 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது, தினமும் 5 மணி நேரம் மட்டுமே மதுக்கடை திறந்திருக்க வேண்டும். குடியிருப்பு, வழிபாட்டு தலங்கள், பள்ளிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை உடனே அகற்ற வேண்டும். மாதந்தோறும் கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைப்பதன் மூலம் படிப்படியாக மதுவிலக்கை மாநிலத்தில் அமல்படுத்தலாம். மதுவற்ற மாநிலமும், ஊழலற்ற ஆட்சியும் அமைப்பதுதான் காந்திய மக்கள் இயக்கத்தின் கொள்கை.

25 தொகுதிகளில் போட்டி
காந்திய மக்கள் இயக்கத்துக்கு மக்கள் மத்தியில் உள்ள ஆதரவை தெரிந்து கொள்ளவே வரும் சட்டசபை தேர்தலில் 25 தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுகிறோம். மற்ற 209 தொகுதிகளில் மக்கள் நலக் கூட்டியகத்துக்கு ஆதரவு அளிக்கப்படும்'' என்றார்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications