போய் ரஜினி, டிஆர் கிட்ட கேக்க வேண்டியதுதானே!- கங்கை அமரன்
பீப் பாட்டு பற்றி அதற்கு இசையமைத்த அனிருத், எழுதிப் பாடிய சிம்பு ஆகியோரின் நெருங்கிய உறவினர்களான ரஜினி மற்றும் டி ராஜேந்தரிடம் கேட்க வேண்டியதுதானே என்று இசையமைப்பாளர் கங்கை அமரன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
இளையராஜா போன்ற இசைப் பெரியோர்களிடம் எதைப் பற்றி கருத்துக்கள் கேட்பது என்ற வரம்பு வேண்டும்.

அவர் இசையமைத்த பாடல்களையே அவர் கேட்டு நான் பார்த்ததில்லை.
இந்த முட்டா 'பீப் பசங்க' போட்ட பாட்ட பத்தி அவர் கிட்ட கேட்டது எனக்கு புடிக்கல.
ஏன் ரஜினி சாரோட சொந்தக்காரப் பையன் னே அனிருத்து...? அவரக் கேளுங்க.
ஏன் தமிழ் தமிழ்னு உசுர விடராரே அந்த வெங்காயத்தோட அப்பா டி ஆர்., அவங்க அபிப்ராயம் என்னன்னு கேட்டுப் போடுங்க.
என் அன்புக்குரிய பத்திரிகை நண்பர்களே, உண்மையாக உயர்ந்தோரை உள்ளம் கொதிக்க வைக்க வேண்டாம்!
-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications