சென்னைக்கு வந்த விமானத்தின் கழிவறையில் 85 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் - சுங்கத்துறை பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னைக்கு வந்த விமானத்தின் கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டரை கிலோ தங்கம் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
சிங்கப்பூரில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று வந்தது. பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற நிலையில், சுத்தம் செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

அப்போது விமான கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெட்டியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பெட்டியை பரிசோதித்து பார்த்தபோது, அதில் இரண்டரை கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது தெரிய வந்தது இதன் மதிப்பு சுமார் 85 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இதனை பறிமுதல் செய்த அவர்கள், இதனை கடத்தி வந்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications