பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 35 பவுன் நகை, ரூ. 20,000 பணம் திருட்டு.. கரூரில்
கரூர்: கரூரில், பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 35 பவுன் தங்கம், ரூபாய் 20 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
கரூரை அடுத்த வெங்கமேடு மேம்பாலம் அருகில் வசித்து வருபவர் சுமதி (49). இவரது கணவர் காலமாகிவிட்டார். இவரது மகன் தர்மராஜ் (29) இவர் இப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் சுமதி மருத்துவ பரிசோதனைக்காக மகனுடன் கோவைக்கு சென்றுள்ளார். இதனை அறிந்த மர்மநபர்கள் நேற்றிரவு வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் வீட்டிற்குள் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 35-பவுன் தங்க நகைகளையும், ரூபாய் 20-ஆயிரத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இன்று காலை வீட்டிற்கு திரும்பிய சுமதி வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்சியடைந்த அவர் இது குறித்து வெங்கமேடு காவல் துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ஆய்வு செய்தனர்.

மேலும் இது தொடர்பாக சுமதி மற்றும் தர்மராஜ் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர் முத்துகுமார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications