Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மயிலாடுதுறையே அசந்து போச்சு.. ஒரே பெண்ணை 3 முறை கல்யாணம் செய்து.. அசரடித்த மாப்பிள்ளை

ஒரே பெண்ணை 3 முறை திருமணம் செய்துள்ளார் இளைஞர் ஒருவர்

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை: மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர். மும்மத முறைப்படி திருமணம் செய்துள்ள சம்பவம் மயிலாடுதுறையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

மாயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகர் ரஸ்தா எரகலித்தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன்.. வயது 30 ஆகிறது.. இவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் வரன் தேடி வந்தனர்.. இறுதியில், திருவையாறு பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி என்பவரை பேசி முடித்தனர்.. இவருக்கு 26 வயதாகிறது.

 3 முறை திருமணம்

3 முறை திருமணம்

புருஷோத்தமனை பொறுத்தவரை இந்துவாக இருந்தாலும், சின்ன வயசிலிருந்தே இஸ்லாமியர், கிறிஸ்துவர் என அனைத்து சமூக மக்களுடன் இணைந்து பழகி வந்துள்ளார்.. எல்லா மதமும் சம்மதம் என்ற ரீதியிலேயே இவருடைய கொள்கையும், வாழ்க்கையும் இருந்துள்ளது.. அனைத்து தரப்பு சமுதாயத்திடமும் இவருக்கு நண்பர்களும் உண்டு.. அவர்களின் மதங்கள் புருஷோத்தமனை பெரிதளவு ஈர்த்தும் வந்துள்ளது..

சம்மதம்

சம்மதம்

எனவே, தன்னுடையதிருமணத்தை 3 மத முறைப்படி நடத்த வேண்டும்என்று ஆசைப்பட்டார்.. இந்த விருப்பத்தை தன்னுடைய பெற்றோரிடம் சொன்னார்.. அவர்களும் புருஷோத்தமனின் விருப்பத்தை ஏற்றுக் கொண்டனர்.. இதை பெண் வீட்டு தரப்பிலும் தெரிவிக்கவும், அவர்களும் ஓகே சொன்னார்கள்.. இருவீட்டின் சம்மதப்படி, முதல் நாள் கிறிஸ்துவ முறைப்படி மற்றும் இஸ்லாமிய முறைப்படி, 2-ம்நாள் இந்து முறைப்படியும் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அழைப்பிதழ்கள்

அழைப்பிதழ்கள்

இந்த 3 திருமணத்திற்காகவே 3 விதமான திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டன.. உறவினர்கள், நண்பர்களுக்கும் 3 பத்திரிகைகளையுமே தந்தார் புருஷோத்தமன்.. குறித்த தேதியில், அதாவது மார்ச் 26-ம் தேதி இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ முறைப்படியும், நேற்றைய தினம் 27-ம் தேதி இந்து முறைப்படி திருமணம் வெகுசிறப்பாக நடந்து முடிந்தது. ஒரே பெண்ணுக்கு மும்மதமுறைப்படி திருமணம் செய்தார் புருஷோத்தமன்..

மணமேடை

மணமேடை

இஸ்லாமிய முறைப்படியான ஆடை, அலங்காரத்துடன் மணமேடையில் புருஷோத்தமனுக்கும் புவனேஸ்வரிக்கும் மயிலாடுதுறை பள்ளிவாசல் மவுலானா திருமணத்தை நடத்தி வைத்து ஆசீர்வதித்தார்.. பிறகு, கிறிஸ்தவ முறைப்படி ஆடை, அலங்காரங்கள் மாற்றப்பட்டு கிறிஸ்தவ போதகர் தலைமையில் மோதிரம் மாற்றி, திருமணம் நடந்தது... நேற்று காலை அதே மண்டபத்தில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது..

திருமணம்

திருமணம்

உறவினர்கள், நண்பர்கள், சுற்றுவட்டார பகுதியினர் இந்த திருமணத்தில் பங்கேற்று மணமக்களை ஆசீர்வதித்தனர். இந்த திருமணம் குறித்து மாப்பிள்ளை புருஷோத்தமன் சொல்லும்போது, " எனக்கு முஸ்லிம், கிறிஸ்தவ நண்பர்கள் அதிகம்... மதநல்லிணக்கம் ஏற்படுத்தவும், தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் இருப்பதை வெளிப்படுத்தவே இப்படி ஒரு திருமணத்தை நடத்தினேன்" என்று பூரித்து சொல்கிறார்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+