திருவண்ணாமலை அருகே கோர விபத்து.. அரசுப் பேருந்து மோதி டிஎஸ்பி உயிரிழப்பு!
திருவண்ணாமலை அருகே அரசுப் பேருந்து மீது கார் மோதியதில் நாமக்கலை சேர்ந்த டிஎஸ்பி சம்பவ இடத்திலேயே பலியானார்.
திருவண்ணாமலை : தென்அரசம்பட்டு பகுதியில் இன்று அதிகாலையில் கார் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த நாமக்கல்லை சேர்ந்த டிஎஸ்பி சண்முக சுந்தரம் சம்பவ இடத்திலேயே பலியானார்.
நாமக்கல்லைச் சேர்ந்த சண்முகசுந்தரம் கார் ஒன்றில் திருவண்ணாமலைக்கு பயணம் செய்துள்ளார். இன்று அதிகாலையில் திருவண்ணாமலை அருகே தென் அரசம்பட்டு என்ற பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது அரசுப் பேருந்து மோதியதாக தெரிகிறது. இந்த விபத்தில் காரின் முன்பக்கம் சுக்குநூறாக உடைந்து போனது.

காரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம் ஓட்டி வந்ததாக தெரிகியது, விபத்தில் காரின் முன் பக்கம் சேதமடைந்த நிலையில் டிரைவர் சீட்டில் இருந்த டிஎஸ்பி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். டிஎஸ்பி சண்முக சுந்தரத்துடன் பயணித்தவர்கள் பலத்த காயங்களுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications