இந்த அரசாணையை அப்பவே வெளியிட்டிருந்தால் 13 அப்பாவி உயிர்கள் தப்பியிருக்குமே
ஸ்டெர்லைட் ஆலையை அப்போதே மூடுவதற்கு உத்தரவிட்டிருந்தால் 13 உயிர்களை காப்பாற்றியிருக்கலாமே.
Recommended Video

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள அரசாணையை அப்போதே வெளியிட்டிருந்தால் 13 அப்பாவி உயிர்களை காப்பாற்றியிருக்கலாமே.
ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து விஷவாயு கசிவு கடந்த 2013-ஆம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி ஏற்பட்டது. இதனால் கண் எரிச்சல் ஏற்படுவதாக வந்த புகாரை அடுத்து அந்த ஆலையை தமிழக அரசு மார்ச் 29-இல் மூடியது.
இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீடு செய்தது. இதையடுத்து அந்த ஆலை இயங்குவதற்கு பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. பசுமை தீர்ப்பாயம் அனுமதிக்கு எதிரான வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

பேரணி
தூத்துக்குடியில் இந்த ஆலையால் விவசாயம் , நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு உடல்நிலையும் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டிய மக்கள் கடந்த 100 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் மக்கள் பேரணி நடத்தினர்.

13 பேர் பலி
இதையடுத்து ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்ற அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். எனினும் கேட்காததால் துப்பாக்கியை பிரயோகம் செய்தனர். இதில் 13 பேர் பலியாகிவிட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனால் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கை பலமாக உள்ளது.

உணர்வுகளுக்கு மதிப்பளித்து
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. மேலும் பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட முடிவு செய்யப்பட்டதாக அரசாணையில் உள்ளது.

13 உயிர்கள் தங்கியிருக்கும்
இதுபோன்ற ஒரு முடிவை 100 நாட்களுக்கு முன்னரே எடுத்திருக்கலாம். காலம் கடந்த எடுக்கப்பட்ட முடிவால் 13 பேரின் உயிர்கள் பறிபோயுள்ளன. பல ஆயிரம் துயரங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றை தவிர்த்திருக்கலாம். தூத்துக்குடி மீது ரத்த களறி ஏற்படாமல் இருந்திருக்கும். மக்களும் தங்கள் வேதனையை தவிர்த்துவிட்டு அவரவர் வேலையை பார்த்திருப்பர். எந்த பிரச்சினையாக இருந்தாலும் உயிர் பலி இருந்தால் மட்டுமே நடவடிக்கை இருந்தால் எப்படி. இதுதான் கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications