For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகம் முழுவதும் இன்று அரசு பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் - பள்ளிக்கல்வித்துறை

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது.

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து தமிழகம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நாளை நடைபெறுகிறது. இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள், இயக்கங்கள், லாரி உரிமையாளர்கள் சங்கம், ஆம்னி பஸ் உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளன.

government scholls and colleges operate as usual - School Education Department

இந்த போராட்டத்துக்கு தனியார் பள்ளி உரிமையாளர் சங்கமும் ஆதரவளிப்பதாக அதன் தலைவர் நந்தகுமார் அறிவித்துள்ளார். இந்நிலையில், தமிழகம் முழுவதும் இன்று அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

மேலும் ரயில்வே நிலையங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். பேருந்துகள் பாதுகாப்புடன் இயக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. இடையூறு ஏற்படுத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

English summary
tamilnadu School Education Department says, government scholl's and colleges operate as usual
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X