For Daily Alerts
Just In
பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துங்க... நவம்பர் 15-இல் அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்!
சென்னை: பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் என நவம்பர் 15-ஆம் தேதி அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
அரசு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை அரசு அமல்படுத்த வேண்டும்; 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்; அங்கன்வாடி, சத்துணவு, ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 3 கட்ட போராட்டங்களில், பணியாளர் சங்கம் ஈடுபட உள்ளது.
அக்டோபர் மாதம் பிரசார இயக்கத்தையும் நவம்பர் 10-ஆம் தேதி திருச்சியில் வேலைநிறுத்த மாநாட்டையும் நவம்பர் 15-இல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
Comments
English summary
Government Staffs Association decides to do strike on November 15 demanding to implement Old pension scheme.
Story first published: Monday, August 27, 2018, 13:34 [IST]