எடப்பாடி பெரும்பான்மையை நிரூபித்தது செல்லாது என ஆளுநர் அறிவிக்க வேண்டும்: கிருஷ்ணசாமி
எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபித்தது செல்லாது என ஆளுநர் அறிவிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தது செல்லாது என ஆளுநர் அறிவிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுத்தியுள்ளார். மேலும் சட்டசபையில் இருந்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் வெளியேற்றப்பட்டது ஜனநாயக மரபுக்கு எதிரானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் எதிர்க்கட்சிகள் இன்றி இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரிய எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.
இதனால் ஏற்பட்ட அமளிக் காரணமாக எதிர்க்கட்சியினர் வலுக்கட்டாயமாக அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் எடப்பாடி பெரும்பான்மையை நிரூபித்தது செல்லாது என ஆளுநர் அறிவிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் சட்டசபையில் இருந்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் வெளியேற்றப்பட்டது ஜனநாயக மரபுக்கு எதிரானது எனவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.