அது மட்டும் நடக்கட்டும்.. ஆளுநருக்கு வழியனுப்பு விழா கூட இருக்காது.. அவரே ஓடிருவார் : ஆ.ராசா பேச்சு!
பெரம்பலூர்: தமிழ்நாட்டில் இருந்து அடுத்த பிரதமர் வந்தால் அதற்கு அடுத்த நாள் ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவிக்கு வழியனுப்பு விழா கூட இருக்காது, தானாகவே ஆளுநர் ஓடக்கூடிய சூழல் வரும் என திமுக எம்.பி ஆ.ராசா பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.விக்கும் ஆளும் திமுக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் முதலமைச்சரின் அதிகாரத்தில் தலையிடும் வகையில் ஆளுநர் தெரிவித்த கருத்துகள் திமுக மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்கம் செய்யக் கோரி, மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது.

மதிமுக பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், அரியலூர் மாவட்ட செயலாளரும், அரியலூர் எம்.எல்.ஏவுமான சின்னப்பா ஆகியோர் தலைமையில் கையெழுத்து இயக்கம் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக துணை பொதுச் செயலாளரும், நீலகிரி எம்.பியுமான ஆ. இராசா கலந்து கொண்டு, முதல் கையெழுத்திட்டு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய ஆ.ராசா, "தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டில் சுமுகமான நடைமுறையில் நல்லாட்சி நடைபெற்றால், முதல்வர் ஸ்டாலினுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தில் அதனை தடுக்கும் விதமாக ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.
தமிழ்நாட்டில் நல்லாட்சி நடைபெற்றால் திராவிட சித்தாந்தம் வளர்ந்து விடும், திராவிட சித்தாந்தத்தை வளரவிட்டால் தமிழ்நாட்டிற்குள் காவியை கொண்டு வர முடியாது என்ற காரணத்தினால் ஆளுநர் தமிழக அரசுக்கும் திமுகவிற்கும் எதிராகச் செயல்பட்டு வருகிறார். பிரதமர் மோடி, அமித்ஷா, ஆகியோரோடு கைகோர்த்துக்கொண்டு செயல்பட்டு வரும் ஆளுநரை தூக்கி எறிய கூடிய நாள் வெகு விரைவில் இல்லை.
தமிழரை பிரதமர் ஆக்கப்போகிறோம் என்கிறார் அமித் ஷா. எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் யார் பிரதமர் என்பதை தமிழ்நாடு தான் தீர்மானிக்கும். அதனை முதல்வர் ஸ்டாலின் தான் முடிவு செய்வார். அப்படி ஒரு ஆட்சி அமைந்த இரண்டாவது நாளில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வழியனுப்பு விழா கூட நடைபெறாது, தானாகவே அவர் தமிழ்நாட்டையும்ஆளுநர் மாளிகையையும் விட்டு ஓடி விடுவார். அந்த சூழலை உருவாக்குவோம்.
யார் அமைச்சராக இருக்கலாம், யார் அமைச்சராக இருக்கக்கூடாது, என முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்டவர் முதலமைச்சர். அப்படித்தான் சட்டம் சொல்கிறது. அதிலேயும் ஆளுநர் குறுக்கே வந்து கருத்து சொல்கிறார். முதலமைச்சருக்கு நல்ல பெயர் கிடைக்கக்கூடாது என ஆளுநர் செயல்படுகிறார்." என ஆவேசமாகப் பேசினார்.
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி












Click it and Unblock the Notifications