குற்றுயிரும், குலை உயிருமாக வரும் அரசு பஸ்கள்.. பீதியில் தெறித்து ஓடும் மக்கள்
நெல்லை: காயலான் கடைகளுக்குப் போக வேண்டிய பஸ்களை, நெல்லை அரசு போக்குவரத்து கழகம் தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் மக்கள் பீதியில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நெல்லை அரசு போக்குவரத்து கழகம் மூலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலான பஸ்கள் உருக்குலைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன.
தற்போது பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில் பஸ்களின் கூரைகளின் ஓட்டையில் தணணீர் கசிந்து விழுகிறது. இதனால் பயணிகள் குடை பிடித்தவாறு பயணம் செய்து வருகின்றனர். இருக்கைகள் உடைந்து காணப்படுவதால் அதில் உள்ள பஞ்சு நனைத்து போய் விடுகிறது. இதனால் பயணிகள் இருக்கையில் உட்காரும் போது பயணிகள் ஆடையில் கறை ஏற்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் மழை பெய்யும் போது தண்ணீர் படாமல் இருக்க ஜன்னல்களை இறக்கி விட முடியவில்லை. காரணம் அவை அனத்துமே ஓட்டை உடைசலாக உள்ளதால். இதனால் சாலையில் ஓடும் மழை நீர் பஸ்சுக்குள் சகதியுடன் வந்து தெறித்து அபிஷேகம் செய்கிறது.
படு மோசமான நிலையில் அரசு பஸ்கள் இயக்கப்படுவதால் அவற்றில் பயணிக்க மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. முறையாக பராமரிக்கப்பட்டு கொஞ்சம் இருக்கைகளுடன் இயக்கப்படும் பஸ்களில் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். பழுதைடந்த பஸ்களால் வசூல பாதிக்கப்பட்டு வருவதாக தொழிலாளர்கள் குறறம்சாட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications