ஆடம்பர விழா நடத்துவதில்தான் கவனமா இருக்காங்க.. அரசை சரமாரியாக சாடும் டிடிவி தினகரன்!
ஆடம்பர விழா நடத்துவதில்தான் அரசு கவனமாக இருப்பதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
நெல்லை: ஆடம்பர விழா நடத்துவதில்தான் அரசு கவனமாக இருப்பதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
டிடிவி தினகரன் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மக்களை இன்று நேரில் சந்திக்கிறார். இதற்காக அவர் கன்னியாகுமரி புறப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நெல்லையில் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நிவாரணப் பணியில் அரசு கவனம் செலுத்துவது இல்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.
ஓகி புயல் குறித்து மத்திய, மாநில அரசுகள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். நிவாரணப் பணிகளிலும் அரசு சுணக்கமாக செயல்படுவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் நிவாரணப் பணிகளை இனியாவது முடுக்கிவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் ஆடம்பர விழாக்களை நடத்துவதில் அரசு கவனமாக இருப்பதாகவும் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications