போக்குவரத்து ஊழியர் தற்கொலைக்கு குடும்ப பிரச்சினைதான் காரணம்: அமைச்சர் விஜய பாஸ்கர்
போக்குவரத்து ஊழியர்கள் மரணத்திற்கு போக்குவரத்து கழக பிரச்சனை காரணமில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கமளித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் போக்குவரத்து தற்கொலை செய்துக்கொண்டும், மனஉளைச்சலால் மாரடைப்பில் மரணமடைந்து வரும் நிலையில் இதற்கு அரசு காரணமல்ல என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ. அபுபக்கர், கடையநல்லூர் தொகுதியைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் கணேசன், போக்குவரத்து கழக வேலை நிறுத்தம் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார்.

அப்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ஓட்டுநர் கணேசன் உடல்நலக் குறைவால் கடந்த மாதம் 27ம் தேதியே விடுப்பில் சென்றதாகவும், ஆனால் இந்த மாதம் 4-ஆம் தேதிதான் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியதாகவும் தெரிவித்தார். கணேசன் மற்றும் அவரது மனைவி இடையேயான குடும்ப பிரச்னை தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் உள்ளதாகக் கூறிய அவர், அதன் காரணமாகவே கணேசன் தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து ஊழியர்கள் தற்கொலை செய்துக்கொண்டதாகவும், மனஉளைச்சலில் மாரடைப்பில் மரணமடைந்ததாகவும் தகவல் வெளியானது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், இதற்கும் அரசுக்கு சம்பந்தமில்லை என்றும், பின்னணி விவரம் தெரியாமல் அரசின் மீது குற்றச்சாட்டு வைக்ககூடாது என்று கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications