சங்கரராமன் கொலை வழக்கில் மேல்முறையீடு?
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: சங்கரராமன் கொலை வழக்கில் புதுச்சேரி நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 23 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தீர்ப்புக்கு சங்கரராமனின் மகன் அதிருப்தி தெரிவித்துள்ளர்.

இந்த நிலையில் தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் தேவதாஸ், சங்கரராமன் குடும்பத்தினரின் பிறழ் சாட்சியமே 23 பேர் விடுதலைக்கு காரணம் என்று கூறினார்.
இருந்தாலும், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து தமிழக அரசுடன் பேசி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications