பொன்.மாணிக்கவேல் மகள் திருமண நிகழ்ச்சியில் எச்.ராஜா பங்கேற்பு.. என்னே பவ்யம், என்னே சிரிப்பு
Recommended Video
சென்னை: சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் மகள் திருமணம், சென்னையில், இன்று நடைபெற்றது. இந்த திருமணத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் எச்.ராஜா கலந்துகொண்டு பொன்.மாணிக்கவேலிடம் அளவளாவினார்.
சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு, பல ஆண்டுகளுக்கு முன்பாக தமிழகத்தில் திருட்டுப்போன சிலைகளையும் மீட்டு வந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மக்களின் ஏகோபித்த பாராட்டுகளை பொன்.மாணிக்கவேல் டீம் பெற்று வருகிறது.
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
இருப்பினும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் பொன்.மாணிக்கவேல் குழு விசாரணை நடத்துவதாக கூறி, சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ வசம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெரிய புள்ளிகளை காப்பாற்றுவதற்காக சிபிஐ வசம் வழக்கு ஒப்படைக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதனிடையே, தமிழக அரசு பரிந்துரையை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
|
எச்.ராஜா பங்கேற்பு
இந்த நிலையில் பொன்.மாணிக்கவேல் மகள் டாக்டர். பாக்கியலட்சுமி திருமணம் சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்சன் சென்டரில் இன்று காலை நடைபெற்றது. இந்த திருமண விழாவில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் எச்.ராஜா பங்கேற்றார். அவர் பொன்.மாணிக்கவேலிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் காட்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
|
தில்ல பார்த்தீங்கல்ல
எச்.ராஜா, இந்த திருமண விழாவில் பங்கேற்றது நெட்டிசன்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்களை தூண்டிவிட்டுள்ளது. சிலர் ஆதரவாகவும், சிலர் கேலி செய்தும் ட்வீட்டுகளை வெளியிட்டுள்ளனர். எங்க தலைக்கு தில்ல பார்த்திங்களா என கேட்கிறார், இந்த நெட்டிசன். ஏன் இப்படி கேட்கிறார், இதன் அர்த்தம் என்ன என்பது அவருக்கே வெளிச்சம்.
|
விரைவில் கைது
என்னதான் நாடகம் போட்டாலும் ஐயா பொன்.மாணிக்கவேல் அவர்கள் சரியான முறையில் விசாரணை செய்து சிலை திருடர்களை சட்டத்தின் முன் நிறுத்துவார்கள் என்ற நம்பிக்கை தமிழக மக்களுக்கு உள்ளது. தமிழக மக்களுக்கு திருடன் யார் என்று முக்கால்வாசி தெரியும். விரைவில் கைது செய்து தண்டனை கொடுக்க வேண்டும். இப்படி கூறுகிறார் இந்த நெட்டிசன். ஆமா, யார் நாடகம் போடுகிறார்? சிலை திருடன் யார் என்பது மக்களுக்கு தெரியும் என்கிறாரே யாராக இருக்கும்? சரி விடுங்க, போலீசார் அதை கண்டுபிடிக்கட்டும்.