4 வாரத்திற்குள் எச் ராஜா நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்.. சென்னை ஹைகோர்ட் அதிரடி!
உயர்நீதிமன்றத்தை இழிவான வார்த்தைகளால் விமர்சித்த எச் ராஜா 4 வாரத்திற்குள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Recommended Video

சென்னை: நீதித்துறையை இழிவான வார்த்தைகளால் விமர்சித்த எச் ராஜா 4 வாரத்திற்குள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுக்கோட்டை அருகே நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எச் ராஜா உயர்நீதிமன்றத்தையும் போலீசாரையும் தகாத வார்த்தைகளால் விமர்சித்தார்.
அவரது இந்த பேச்சு குறித்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக எச் ராஜா மீது 8 பிரிவுகளின் கீழ் திருமயம் காவல்துறையினர் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கறிஞர்கள் கோபம்
நீதிமன்றத்தை இழிவாக பேசியதால், எச்.ராஜா மீது வழக்கறிஞர்கள் கோபத்தில் இருக்கிறார்கள். இதனால் எச்.ராஜாவிற்கு எதிராக வழக்கு தானாக முன்வந்து விசாரிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஹுலுவாடி ரமேஷ் அமர்வு
ஆனால் எச்.ராஜாவுக்கு எதிராக தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் தலைமையிலான அமர்வு எச் ராஜா குறித்து தாமாக விசாரிக்க மறுத்துவிட்டது.

கோரிக்கை நிராகரிப்பு
அவர் மீது வழக்கு தொடுக்காமல் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதனால் 3 வழக்கறிஞர்களின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

வழக்கு தொடர அனுமதி
அதேசமயம், எச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி அளித்துள்ளது. அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஆஜராக உத்தரவு
இந்நிலையில் நீதிபதிகள் சிடி செல்வம், நிர்மல் குமார் அமர்வு எச் ராஜா 4 வாரத்தில் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளது. 4 வாரத்தில் ஏதாவது ஒரு நாளில் கட்டாயமாக ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்றும் அந்த அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நேரில் ஆஜராக உத்தரவு
நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ், கல்யாண சுந்தரம் ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக விசாரிக்க மறுத்த நிலையில் சிடி செல்வம் அமர்வு புகாரை தாமாக விசாரணைக்கு எடுத்து, எச் ராஜா நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications