நக்கலா.. நக்கலான்னு கேட்டேன்.. செய்தியாளரிடம் எகிறிய எச் ராஜா!
தமிழகத்தில் பாஜக எப்போது ஆட்சியை பிடிக்கும் என கேட்ட செய்தியாளரிடம் எச் ராஜா என கேட்டு எகிறினார்.
சென்னை: தமிழகத்தில் பாஜக எப்போது ஆட்சியை பிடிக்கும் என கேட்ட செய்தியாளரிடம் எச் ராஜா என
நக்கலா கேட்டு எகிறினார்.
குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. குஜராத்தில் தொடர்ந்து 6வது முறையாகவும் ஹிமாச்சலில் பத்தாண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியமைக்கிறது.
இதனால் பாஜக தொண்டர்கள் மட்டுமின்றி தலைவர்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில் பாஜகவின் வெற்றி குறித்து பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா செய்தியாளர்களிடம் பேசினார்.

மக்களிடம் தெளிவு
அப்போது குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் பாஜகவுக்குக் கிடைத்த வெற்றியால் 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் எந்த திசையை நோக்கி செல்கிறது என்பதில் மக்களிடம் தெளிவு பிறந்துள்ளது என்று அவர் கூறினார்.

எப்போது ஆட்சியை பிடிக்கும்?
இந்த தேர்தலின் வெற்றி ஜாதி மற்றும் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக உள்ளது என்றும் எச் ராஜா கூறினார். அப்போது செய்தியாளர் ஒருவர் தமிழகத்தில் பாஜக எப்போது ஆட்சியை பிடிக்கும் என கேள்வி எழுப்பினார்.

நக்கலா? நக்கலான்னு கேட்டேன்..
இதுஏதோ கேட்கக்கூடாத கேள்வி என்பதை போல எகிறினார் எச் ராஜா. மேலும் செய்தியாளரிடம் கோபமாக நக்கலா? நக்கலான்னு கேட்டேன் என்று கூறிவிட்டு வேகவேகமாக இடத்தை காலி செய்து புறப்பட்டார்.

எச் ராஜாவுக்கே வெளிச்சம்
தமிழகத்தில் பாஜக எப்பேது ஆட்சியை பிடிக்கும் என்று கேட்ட செய்தியளாரிடம் எச் ராஜா ஏன் இவ்வளவு ஆவேசமாக பேசினார் என தெரியவில்லை. நடக்காத ஒன்றை பற்றி ஏன் கேட்கிறீர்கள் என ஆவேசப்பட்டாரோ என்னவோ... அவருக்கே வெளிச்சம்..












Click it and Unblock the Notifications