Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பன்றிக் காய்ச்சல் குறித்து கவலை வேண்டாம்- தடுப்பு நடவடிக்கைகளுடன் தயார் நிலையில் தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் குறித்த தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நோய் நிலவரம் குறித்த ஆய்வுக் கூட்டம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

Health Department gears for preventing swine flu

2010 ஆம் ஆண்டு பன்றிகாய்ச்சல் வைரஸ் கிருமியின் வீரியம் குறைந்த காரணத்தினால் இந்தக் காய்ச்சலை கொடிய நோய் என்ற நிலையில் இருந்து மாற்றி அடுத்த கட்டத்தில் அந்தந்த பருவ காலங்களில் காணப்படும் குணப்படுத்தக்கூடிய சாதாரண ஃபுளூ காய்ச்சல் என்று உலக சுகாதார நிறுவனம் அதன் தரத்தைவகைப்படுத்தியுள்ளது.

இந்தக் காய்ச்சலின் தாக்கம் தற்போது டெல்லி, ராஜஸ்தான் போன்ற வடமாநிலங்களிலும், தெலுங்கானா போன்ற மாநிலங்களிலும் உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இந்த நிலையில், தமிழக அரசு இந்நோயை தடுத்திட அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. பன்றிக் காய்ச்சலுக்கு ஒசில்டாமிவீர் என்ற மருந்தை மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொண்டால் இந்நோயை எளிதாக குணப்படுத்தலாம்.

தமிழக அரசு மருத்துவ நிலையங்களில் தேவையான அளவு டாமி புளூ மாத்திரைகள் தயார் நிலையில் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த காய்ச்சலைக் கண்டறிவதற்கு தமிழகத்தில் சிறப்பு மையங்களாக, கிங் மருத்துவநிலையம் உட்பட ஆறு ஆய்வு மையங்களும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஒரு ஆய்வு மையமும் செயல்படுகின்றன. இது தவிர 13 தனியார் ஆய்வு மையங்களுக்கும் இந்த காய்ச்சலைக் கண்டறிவதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கென, தனியாக சிறப்பு வார்டுகள் அனைத்து மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நோய்க்கு தேவையான சிகிச்சை அளிக்க, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குனரகத்தில் பன்றிக் காய்ச்சல் மற்றும் அனைத்து வகையான காய்ச்சல்கள் குறித்து 24 மணி நேரமும் மருத்துவ ஆலோசனைகள் பெறும் வகையில் தகவல் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தகவல்கள் பெற 104 சேவையையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்க சில சுகாதாரமான வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். இருமும் பொழுதும், தும்மும் பொழுதும் கைகுட்டையால் முகத்தை மறைத்துக்கொள்ள வேண்டும். மேலும் அடிக்கடி சோப்பு போட்டு கைககளை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.

குறிப்பாக வீட்டிலிருந்து பணியிடம் மற்றும் வெளியிடங்களுக்கு சென்றவுடன் ஒரு முறை கைகளை நன்றாக கழுவ வேண்டும். மீண்டும் வீடு திரும்பியவுடன் ஒரு முறை கைகளை கழுவ வேண்டும்.

காய்ச்சல், சளி, இருமல், தொண்டைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்ளவேண்டும். சுயமாக மருந்துகளை உட்கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மேலும் மருந்துக்கடைகளில் மருத்துவரின் சீட்டு இல்லாமல் மருந்துகளை வாங்கி உட்கொள்வதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

தமிழகத்தில் இந்தக் காய்ச்சலைத் தடுப்பதற்கு தேவையான தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், அவ்வாறு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான சிசிக்சை அளிக்கவும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எனவே இக்காய்ச்சல் தொடர்பாக பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

பன்றிக் காய்ச்சல் குறித்து தொடர்பு கொள்ளை தொலைபேசி எண்கள்: 044 - 24350496, 044- 24334811, 94443 40496 மற்றும் 93614 82899.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+