கருப்பசாமி பாண்டியன் முன்ஜாமீன் மனு மீண்டும் தள்ளிவைப்பு
நெல்லை: பாலியல் வழக்கில் முன் ஜாமீன் கேட்டு நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் தாக்கல் செய்த மனு தள்ளி வைக்கப்பட்டுளளது.
இந்த நிலையில் புகார் கூறிய தமிழரசி தன்னையும் எதிர்மனுதாரராக சேர்க்க கோரி புது மனு தாக்கல் செய்துள்ளார்.

நெல்லை மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் கருப்பசாமி பாண்டியன். இவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், நெல்லையை சேர்ந்த நாலடியார் மகள் தமிழரசி கொடுத்த பாலியல் புகாரில் பேரில் என் மீது குற்றாலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திமுக உள்கட்சி தேர்தலில் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால் முன்னாள் எம்எல்ஏ மாலை ராஜா மீது கட்சி மேலிட தலைவர்களிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனால் மாலை ராஜா தமிழரசியை தூண்டி விட்டு என் மீது பாலியல் புகார் கொடுக்க செய்துள்ளார்.
அவர் கூறியது போன்று எந்த சம்பவமும் நடக்கவில்லை. இந்த வழக்கில் போலீசார் என்னை கைது செய்ய வாய்ப்புள்ளது என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சிடி செல்வம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கருப்பசாமி பாண்டியன் சார்பில் ஆஜாரான வக்கீல் ஆனந்த் மனுதாரர் மீது பொய்யான புகார் தரப்பட்டுள்ளது. தேவையில்லாமல் செய்தி பெரிதுப்படுத்தப்படுகிறது என்றார்.
இந்த நிலையில், புகார்தாரர் தமிழரசி நேரில் ஆஜராகி வழக்கில் என்னையும் எதிர்மனுதாரராக சேர்த்து எனது விளக்கத்தையும் கேட்க வேண்டும் என்றார். இதனை ஏற்று கொண்ட நீதிபதி மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
அப்போது குற்றாலம் இன்ஸ்பெக்டர் மன்னவன் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கருப்பசாமி பாண்டியன் தமிழரசியிடம் தவறாக நடந்துள்ளார். பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளது. வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்து விசாரணை நடத்த வேண்டி உள்ளது. மனுதாரர் அரசியல் பலம் மிக்கவர் என்பதால் முன்ஜாமீ்ன் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார் என தெரிவிக்கப்பட்டது.
இதை அடுத்து முன் ஜாமீன் மீதான விசாரணை மீண்டும் நாளைக்கு தள்ளி வைக்கப்பட்டது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications