For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராணி மேரி கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை.. பலத்த போலீஸ் பாதுகாப்பு

சென்னை ராணி மேரி கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதை அடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை ராணி மேரி கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதை அடுத்து அந்த பகுதியில் அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆர்கே நகருக்கு கடந்த 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர், தினகரன் அணி என போட்டி கடுமையாக நிலவியது.

Heavy police protection in Queen's Mary college

மொத்தம் 1.76 லட்சம் வாக்குகள் பதிவான நிலையில் அதன் வாக்கு பதிவு இயந்திரங்கள் ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ளது.

முன்னதாக ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் அடையாள அட்டை இல்லாமல் வாக்கு எண்ணிக்கை மையத்தினுள் நுழைந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மொத்தம் 19 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

English summary
Heavy police protection in Queen's Mary college as the RK Nagar bypoll's counting is to be going on.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X