ஒசூர் சாலைகளில் தேங்கி நின்ற மழை நீரால் போக்குவரத்து பாதிப்பு!
Subscribe to Oneindia Tamil
ஒசூர்: ஒசூரில் திடீரென இடியுடன் கூடிய கன மழை பெய்ததால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுயது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இரு சக்கர வாகன ஓட்டிகளும பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
ஒசூர் நகரில் நேற்று பகல் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 5 மணி முதல் 7 மணி வரை திடீரென கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் நகரப்பகுதியில் உள்ள சாலைகளில் மழைநீர் செல்ல வழி இல்லாமல் சாலைகளில் தேங்கி நின்றது.

பாகலூர் சாலையில் மழை நீர் வெளியேர முடியாமல் கழிவு நீருடன் சென்றதால் மக்கள் நடமாட முடியவில்லை. ஒசூர் நகராட்சி, வட்டார் அலுவலக சாலை, ராம்நகர், பாகலூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொது மக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். மேலும் இதனால் வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. நடைபாதையில் வியாபாரம் செய்பவர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.












Click it and Unblock the Notifications