வரும் 10, 11ஆம் தேதிகளில் தமிழகத்தில் கனமழை அடித்து ஊத்துமாம்.. வானிலை மையம் வார்னிங்!!
வரும் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: வரும் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக வட மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்தாலும் வெயில் சற்று அதிகமாகவே உணரப்பட்டது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

இடியுடன் கூடிய மழை
இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மாலை அல்லது இரவில் மழை
சென்னையை பொருத்தவரை இன்று வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10,11 தேதிகளில் கனமழை
மேலும் வெப்பசலனம் காரணமாக வரும் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழை பெய்யவில்லை
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குறிப்பிட கூடிய அளவில் மழை எதுவும் பதிவாகவில்லை. மேலும் வெப்பநிலையும் வழக்கத்தைவிட சற்று குறைவாகவே காணப்பட்டது என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications