இரண்டு நாட்களாக ஓய்ந்துள்ள மழை.. கேரளாவில் மெல்ல திரும்புகிறது இயல்பு நிலை..!!
கனமழை மற்றும் வெள்ளத்தால் சின்னாபின்னமான கேரளாவில் இயல்புநிலை மெல்ல திரும்பி வருகிறது.
Recommended Video

சென்னை: கனமழை மற்றும் வெள்ளத்தால் சின்னாபின்னமான கேரளாவில் இயல்புநிலை மெல்ல திரும்பி வருகிறது.
கேரளாவில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆரம்பத்தில் லேசாக பெய்த மழை பின்னர் விஸ்வரூபம் எடுத்தது.
இதனால் கேரளாவின் பல பகுதிகள் வெள்ளக்காடானது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகின.

மக்கள் மாயம்
வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை சுமார் 400 பேர் வரை மரணமடைந்துள்ளனர். ஏராளமான மக்களை காணவில்லை என கூறப்படுகிறது.

நிவாரண முகாம்கள்
இதுவரை ஏறக்குறைய 8 லட்சம் பேர் மீட்கப்பட்டு, 5645 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் மீட்கப்படாமல், நீரில் தத்தளித்து வருகின்றனர்.

கேரளாவுக்கு உதவிக்கரம்
முகாம்களில் 5ஆவது நாளாக உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. பல்வேறு மாநிலங்களும் கேரளாவுக்கு உதவி கரம் நீட்டி வருகிறது.

ஓய்ந்துள்ள மழை
மீட்புப் பணிகள் ஒருபுறம் தொடர்ந்து நடந்து வந்தாலும், நிவாரணம் வழங்கும் பணிகளுடன் சீரமைப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன. கடந்த 2 நாட்களாக கேரளாவில் பல பகுதிகளில் மழை ஓய்ந்துள்ளது.

மக்கள் நிம்மதி
அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இல்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

சுகாதாரப் பணிகள்
இதனிடையே 8 நாட்களுக்குப் பிறகு கொச்சி விமான நிலையத்துக்கு இன்று மீண்டும் பயணிகள் விமான சேவை தொடங்கியுள்ளது.கேரள மாநிலம் கோட்டயத்தில் வெள்ளம் வடிந்த பகுதிகளில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மெல்ல திரும்புகிறது
கேரளாவில் கடந்த 2 நாட்களாக மழை குறைந்துள்ளது. இதனால் பல பகுதிகளில் வெள்ளநீர் வடிய துவங்கிய உள்ளது. இதன் காரணமாக மெல்ல மெல்ல கேரளாவில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு












Click it and Unblock the Notifications