For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இரண்டு நாட்களாக ஓய்ந்துள்ள மழை.. கேரளாவில் மெல்ல திரும்புகிறது இயல்பு நிலை..!!

கனமழை மற்றும் வெள்ளத்தால் சின்னாபின்னமான கேரளாவில் இயல்புநிலை மெல்ல திரும்பி வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கேரளாவில் மெல்ல திரும்புகிறது இயல்பு நிலை..!- வீடியோ

    சென்னை: கனமழை மற்றும் வெள்ளத்தால் சின்னாபின்னமான கேரளாவில் இயல்புநிலை மெல்ல திரும்பி வருகிறது.

    கேரளாவில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆரம்பத்தில் லேசாக பெய்த மழை பின்னர் விஸ்வரூபம் எடுத்தது.

    இதனால் கேரளாவின் பல பகுதிகள் வெள்ளக்காடானது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகின.

    மக்கள் மாயம்

    மக்கள் மாயம்

    வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை சுமார் 400 பேர் வரை மரணமடைந்துள்ளனர். ஏராளமான மக்களை காணவில்லை என கூறப்படுகிறது.

    நிவாரண முகாம்கள்

    நிவாரண முகாம்கள்

    இதுவரை ஏறக்குறைய 8 லட்சம் பேர் மீட்கப்பட்டு, 5645 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் மீட்கப்படாமல், நீரில் தத்தளித்து வருகின்றனர்.

    கேரளாவுக்கு உதவிக்கரம்

    கேரளாவுக்கு உதவிக்கரம்

    முகாம்களில் 5ஆவது நாளாக உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. பல்வேறு மாநிலங்களும் கேரளாவுக்கு உதவி கரம் நீட்டி வருகிறது.

    ஓய்ந்துள்ள மழை

    ஓய்ந்துள்ள மழை

    மீட்புப் பணிகள் ஒருபுறம் தொடர்ந்து நடந்து வந்தாலும், நிவாரணம் வழங்கும் பணிகளுடன் சீரமைப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன. கடந்த 2 நாட்களாக கேரளாவில் பல பகுதிகளில் மழை ஓய்ந்துள்ளது.

    மக்கள் நிம்மதி

    மக்கள் நிம்மதி

    அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இல்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    சுகாதாரப் பணிகள்

    சுகாதாரப் பணிகள்

    இதனிடையே 8 நாட்களுக்குப் பிறகு கொச்சி விமான நிலையத்துக்கு இன்று மீண்டும் பயணிகள் விமான சேவை தொடங்கியுள்ளது.கேரள மாநிலம் கோட்டயத்தில் வெள்ளம் வடிந்த பகுதிகளில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    மெல்ல திரும்புகிறது

    மெல்ல திரும்புகிறது

    கேரளாவில் கடந்த 2 நாட்களாக மழை குறைந்துள்ளது. இதனால் பல பகுதிகளில் வெள்ளநீர் வடிய துவங்கிய உள்ளது. இதன் காரணமாக மெல்ல மெல்ல கேரளாவில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

    English summary
    Heavy rains and floods devastating Kerala comes back slowly. There in no heavy rain Kerala for last two days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X